கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் குட்கா, பான்மசாலா பறிமுதல் : உணவு பாதுகாபுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

கோவை, டிசம்பர் 5

பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பான் மசாலாக்களை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலாக்களை தமிழகத்தில் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில்,பெங்களூரில் செயல்படும் எஸ்.எம்.பி.கே. என்ற நிறுவனம் தனியார் பேருந்தின் மூலமாக கோவைக்கு பான்மசாலக்களை கடத்தி வருவதாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் B. விஜயலலிதாம்பிகை, மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் K. சந்திரன், S.R. ஜெரால்டு, M. வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய குழு நவ இந்தியா அருகே உள்ள வெளியூர் பேருந்துகள் நிறுத்தும் இடத்திற்குச் சென்றனர்.

இன்று அதிகாலை 3:30 மணியளவில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான பான் மசாலாக்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பேருந்த் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.B. விஜய லலிதாம்பிகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலாக்களை கோவைக்கு சிலர் கடத்தி வருகின்றனர். 

இந்த கடத்தல் குறித்த தகவல் அறிந்த உடன் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி, இன்று பெங்களூரில் இருந்து 15 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான பான்மசாலக்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பேருந்தையும் பறிமுதல் செய்தனர். அதோடு, பேருந்தின் ஓட்டுனரான மோகன்குமார் (42) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



கோவையில் தடைசெய்யப்பட்ட இவ்வகை பான்மசாலாக்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 31 உணவு பாதுகாப்பு அலுவலகர்களும் கடைகளில் ஆய்வு நடத்தி விற்பனைக்காக வைக்கப்பட்ட பான் மசாலக்களை பறிமுதல் செய்து வருகின்றனர். 

இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும். தடைசெய்யப்பட்ட பான்மசாலக்கள் விற்பனை மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை பொதுமக்கள் வாட்ஸ் ஆப் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதற்கான தொலைபேசி எண்கள் 960087386, 9444042322. 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...