பாதுகாப்பு வேண்டி கோவையில் காதல் ஜோடி தஞ்சம்

கோவை, டிசம்பர் 8

பாதுகாப்பு கேட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் நிது (28) தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுனராக பணி புரிகிறார். 

அதே பகுதி பகுதியை சேர்ந்தவர் பிளசி (21). பொறியியல் பட்டதாரியான இவரும் நிதுவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர்.

இவர்கள் காதலுக்கு இருவரது வீட்டில் இருந்தும் எதிர்ப்பு வந்ததால் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இந்த நிலையில், தங்கள் உயிருக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று கோரி இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருவரும் தஞ்சமடைந்தனர்.



இது தொடர்பாக நிது செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நாங்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் வீடுகளில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி போத்தனூர் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். 

அப்போது முதல் எங்கள் வீடுகளில் இருந்து எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது. இதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்'என்றார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...