ஜெ., மரணம் விவகாரம்: விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்கத் தமிழக அரசுக்குக் கோரிக்கை

டிசம்பர் 8

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்குக் கலச மஹாலில் அலுவலகம் ஒதுக்கப்பட்டு, டிசம்பர் 25 வரை 3 மாத அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.. திமுக வழக்கறிஞர் சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கணவர் மாதவன் பேட்ரிக், மருத்துவர் சிவக்குமார், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், சிலருக்கு சம்மன் அனுப்பியுள்ளதால், அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் எனத் தமிழக அரசின் பொதுத்துறைக்கு ஆறுமுகசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...