காற்றில் விடப்பட்ட பார்க்கிங் கட்டணங்கள் உத்தரவு


கோவை, டிசம்பர் 8

திரையரங்குகளில் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த கட்டணங்கள் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது ஆனால் கோவையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் இது இன்னமும் அமல்படுத்தப்படவில்லை. இதனால் படம் பார்க்க வரும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அரசு நிர்ணயப்படி மாநகராட்சிக்குட்பட்ட திரையரங்குகளில் கார் அல்லது மூன்று சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய், இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய், நகராட்சிக்கு உட்பட்ட திரையரங்குகளில் கார் அல்லது மூன்று சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாய், இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 7 ரூபாய், பஞ்சாயத்துக்கு உட்பட்ட திரையரங்குகளில் கார் அல்லது மூன்று சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாய், இரு சக்கர வாகனங்களுக்கு 3 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கலாம். இதில் சைக்கிள்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. ஆனால் கோவையில் உள்ள பெரும்பாலன திரையரங்குகளில் இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை.

இது குறித்து சமூக ஆர்வலர் எ. மனோஜ் கூறுகையில், “தமிழக அரசு அறிவித்த கட்டணங்களை கோவையில் உள்ள திரையரங்குகள் இன்னமும் அமல்படுத்தவில்லை. டிக்கெட் விலை உயர்வு, திரையரங்கில் உள்ள உணவுகளின் விலை உயர்வு என பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு டிக்கெட் மற்றும் பார்கிங் கட்டணங்கள் விலையை நிர்ணயம் செய்து உத்தரவிட்டது ஆனால் பார்கிங் கட்டணங்கள் என்ற பெயரில் இன்றும் திரையரங்குகளில் அதிக கட்டணம் தான் வசூலிக்கப்படுகின்றது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில் மால்களில் பார்கிங் கட்டணங்கள் வார நாட்களில் ஒரு கட்டணமும், விடுமுறை நாட்களில் ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது என புகார் தெரிவித்தார்.

மால்களில் கார்களுக்கு ரூபாய் 150 வரையிலும் இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய் 50 வரையும் பார்கிங் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மால்களில் திரையரங்குக்கு வருவோர் மற்ற கடைகளிலும் பொருட்கள் வாங்குவதால் பார்கிங் நேரம் அதிகரிக்கின்றது அதனால் தான் பார்கிங் கட்டணங்கள் அதிகம் வசூலிக்கப்படுகிறது. திரையரங்குகளுக்கு தான் தமிழக அரசு பார்கிங் கட்டணம் நிர்ணயத்துள்ளது எனினும் மால்களில் பார்கிங் நெருக்கடி குறைக்கவே விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது, விரைவில் திரையரங்குகிற்கு வருவோருக்கு என பார்கிங் வரையறுக்கப்பட்டு தமிழக அரசின் கட்டணம் வாங்கப்படும் என மாலில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“தமிழக அரசு நிர்ணயத்துள்ள பார்கிங் கட்டணங்கள் குறித்த உத்தரவு நகல் இன்னமும் எங்களிடம் வந்து சேரவில்லை. தமிழக அரசின் உத்தரவிற்கு முன்பிருந்தே பார்கிங் கட்டணங்கள் குறைவாக தான் வாங்கப்படுகின்றது, உத்தரவு நகல் கிடைத்தவுடன் பார்கிங் கட்டணங்கள் அமல்படுத்தப்படும்,” என கோவை பாபா காம்ப்ளக்ஸ் சினிமாஸ் மேலாளார் எஸ். கிருஷ்ணா கூறினார்.













Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...