கிறிஸ்துவ தேவாலயத்தை அடித்து நொறுக்கிய இந்து முன்னணியினர் - பாதிரியார் உள்பட 5 பேர் படுகாயம்


கோவை, டிசம்பர் 9

கோவை அருகே கிறிஸ்துவ தேவாலயத்தை இந்து முன்னணியினர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், பாதிரியார் உள்பட ஐந்து பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



மத்தம்பாளையம் அருகே கோட்டைப்பிரிவு பகுதியில் பெந்தகோஸ்தே சபை தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அப்பகுதியிலுள்ள ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 



தேவாலயத்தின் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் தேவராஜ் என்பவரது வீடு உள்ளது. அவரது வீட்டில் கூடியிருந்த கவிதா, சந்திரசேகரன் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணியினர், தேவாலயத்தில் உள்ளே புகுந்து சுவரில் பதித்திருந்த ஆளுயர கண்ணாடி மற்றும் மேசை, நாற்காலிகள் உட்பட பல பொருட்களை அடித்து உடைத்தனர். 



அதோடு, அங்கு இருந்த போதகர் கார்த்திக்கை பயங்கரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அந்தக் கும்பலால் தாக்கப்பட்ட ஐந்து பேரில் ஒரு பெண்ணுக்கு கண் அருகே பலத்த காயம் ஏற்பட்டது. 



இதனையடுத்து, தகவலறிந்து போலீஸார் வருவதற்குள், காவி கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.  இந்த சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 

சசிகுமார், செல்வம், சந்திரசேகர், கவிதா மற்றும் வினோத்குமார், ஜெயதேவ் ஆகிய 6 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.



தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்கள்  கோவை அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...