குடிமையியல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவிகளுக்குப் பரிசு வழங்கிக் கவுரவிப்பு


கோவை, டிசம்பர் 11

மாநகராட்சி பள்ளிகளுக்கான ”பாலஜனகிரஹா 2017” குடிமையியல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சிகளில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 

அறம் பொதுநல அறக்கட்டளை மாநகராட்சியுடன் இணைந்து தொடர்ந்து 2-வது ஆண்டாக ”பாலஜனகிரஹா 2017” என்ற குடிமையியல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சித் திட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநகராட்சி பள்ளிகளில் 8-ம் வகுப்பைச் சேர்ந்த 150 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதில், மாணவ, மாணவியர்களுக்கு நமது, உரிமைகள், நமது நகரத்தின் கட்டமைப்பு, போக்குவரத்து, அரசாங்கம், நமது அரசியலமைப்பு உரிமைகள், வளங்கள் பாதுகாத்தல், பேரழிவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி ஒவ்வொரு பள்ளிகளிலும் 25 மணிநேர வகுப்புகள் நடைபெற்றது. 



அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பான 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் பள்ளிக்கு அருகிலிருக்கும் சாலையை ஆய்வு செய்து, அதில் இருக்கும் தேவைகள், பிரச்சனைகள், தீர்வுகள் குறித்து ஒரு விளக்கவுரை பதிவு செய்து கணினியில் காட்சி விளக்கப் படங்களுடன் விளக்கிக் காட்டினர். மேலும், நடுவர்கள் சில கேள்விகள் கேட்டு அவர்களின் பேசும் திறமை மற்றும் புரிந்துணர்தல் ஆகியவற்றை பரிசோதித்தனர். இதில், சிறப்பாக விளக்கிக் காட்டிய எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் பள்ளி முதலிடமும், ராமசாமி நகர்பள்ளி 2-ம் இடமும், செல்வபுரம் பெண்கள் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றது. 



பாலஜனகிரஹா திட்டத்தினால் ஒவ்வொரு குழந்தையையும் நாளைய பங்கேற்கும் குடிமக்களாக உருமாற்றம் பெற்று அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உறுதுணையாக அமையும். சிறுவயதில் இதை அவர்கள் உணர்ந்தால் வருங்கால குடிமக்கள் மிகவும் பொறுப்புள்ளவர்களாக நாட்டின் மேம்பாட்டிற்கு செயல்படுவார்கள் என அறம் பொதுநல அமைப்பினர் தெரிவித்தனர். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...