இந்த ஆண்டுக்கான அன்னை தெரசா விருதைப் பெற்றார் நடிகை பிரியங்கா சோப்ரா

டிசம்பர் 12

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சமூக நீதிக்காக இந்த ஆண்டுக்கான அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டது.

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் போரினால் சீரழிந்துள்ள சிரியா நாட்டுக்குச் சென்றார். அங்கு அகதிகளாக உள்ள குழந்தைகளை சந்தித்து அவர்களிடம் உரையாடினார். இதுபோன்ற சமூக விஷயங்களில் ஆதரவு தரும் வகையில், செயல்பட்டதற்காக அவருக்கு இந்த அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டது.

பல்வேறு பொதுநல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர் என அறியப்படும் பிரியங்கா சோப்ரா, யூனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். இந்த விருதினை அவருக்குப் பதிலாக அவரது தாயார் மது சோப்ரா பெற்று கொண்டார். 

இதுபற்றி அவரது தாயார் கூறுகையில், பிரியங்காவுக்கு பதிலாக இந்த விருதினை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். அதிக இரக்கம் மற்றும் கருணை தன்மை கொண்டுள்ள ஒரு குழந்தையை பெற்றதற்காக நான் நிறைந்த பெருமை கொள்கிறேன்.நீங்கள் எவ்வளவு கொடுக்கிறீர்களோ அந்த அளவிற்குப் பெறுவீர்கள் என்ற உண்மைக்கு எடுத்துக்காட்டாக அவள் இருக்கிறாள். அவள் ஒரு குழந்தையாக இருந்தபொழுதும், அன்னை தெரசாவால் ஈர்க்கப்பட்டு இருக்கிறாள். அவள் பரேலியில் உள்ள பிரேம் நிவாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறாள். எனக் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் கிரண்பேடி, அன்னா ஹசாரே, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுதா மூர்த்தி, மலாலா யூசப்சை, சுஷ்மிதா சென் மற்றும் பில்கீஸ் பனோ எதி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...