கண்மாயில் விழுந்த குட்டியானை : பாசப் போராட்டத்தால் வாகன ஓட்டிகளை விரட்டிய தாய் யானை


டிசம்பர் 12

மேட்டுப்பாளையம் அருகே குட்டியானை கண்மாயில் விழுந்ததால், பரிதவித்த பெண்யானை சாலைகளில் சென்ற வாகனங்களைத் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சுண்டப்பட்டி பிரிவு வனபத்திரகாளியம்மன் கோவிலை அடுத்து தேக்கம்பட்டி சாலையோரம், பம்ப் ஹவுஸ் அருகில் ஒரு பெண் யானை சாலையில் செல்பவர்களை விரட்டியது. மேலும், வாகனங்களையும் சேதப்படுத்தியது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் யானையை அருகில் உள்ள நெல்லிமலை வனப்பகுதிக்குள் விரட்டினர். 



 

இருப்பினும், மீண்டும், மீண்டும் சாலைப்பகுதிக்கே யானை வந்ததால், வனத்துறையினர் சந்தேகமடைந்தனர். பொதுமக்கள் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மாதம் மதிக்கத்தக்க யானைக்குட்டி பழைய வாய்க்காலுக்குள் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்காரணமாகவே, யானை ஒரே பகுதியில் திரிந்ததுடன், சாலையில் செல்பவர்களை துரத்தியது தெரியவந்தது. 

இதையடுத்து, உடனடியாக குட்டி யானையை மீட்டு இளநீர், குளுக்கோஸ் போன்ற ஊக்க பானங்களைக் கொடுத்து, நெல்லிமலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது. 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...