போக்குவரத்து நிர்வாகத்தினைக் கண்டித்து உக்கடம் பணிமனை முன்பு ஊழியர்கள் போராட்டம்


கோவை, டிசம்பர் 14

பேருந்துகளில் வசூலான கட்டண பணத்தை வாங்க போக்குவரத்து நிர்வாகம் காலம் கடத்துவதாகக் கூறி பணிமனை முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

கோவை, உக்கடம் இரண்டாவது போக்குவரத்து பணிமனையில், நேற்று மாலை பணி முடித்து திரும்பிய அரசு பேருந்துகளில் வசூலான கட்டணப் பணத்தை செலுத்த பேருந்து ஊழியர்கள் சென்றபோது அதனை வாங்காமல் நிர்வாகம் காலம் கடத்தியுள்ளது. தொடர்ந்து, இன்று காலை வரை வசூலான பணத்தை பெற்றுக் கொள்ளாமல் நிர்வாகம் காக்க வைத்த நிலையில், இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நிர்வாகம் சார்பில் அந்தப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறுகையில், இன்று நடைபெறும் காத்திருப்புப் போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்பதை தடுக்கும் விதமாகவே வசூலான பணத்தை பெறாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இன்று நடத்தப்படும் காத்திருப்புப் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்க உள்ளோம் என்றனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...