கெயில் திட்டம் : 7 பேர் கொண்ட பாஜக குழுவிற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

கோவை, டிசம்பர் 16

தமிழகத்தில் கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட 7 பேர் கொண்ட பாஜக குழுவை கலைக்குமாறு கொங்கு மண்டல விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கோவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய 7 கொங்கு மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழக பாஜகவால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலையும், அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர். 



இக்கூட்டத்தில், கெயில் நிறுவனத்திற்கு இடையூறற்ற பயன்பாட்டாளர் என்ற அங்கீகாரத்தை வழங்குமாறு தமிழக அரசை மத்திய அரசு வலியுறுத்துவதைக் கண்டித்தும், கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தை சுமூகமாக நிறைவேற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட உயர்நிலை தொழில்நுட்பக் குழுவில், பாதிக்கப்பட்ட  விவசாயிகளையும் உறுப்பினராகச் சேர்த்து களஆய்வு மேற்கொண்டு திட்டத்தை செயல்படுத்தப் பிரதமர் உத்தரவிடக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், கெயில் எரிவாயு குழாய் திட்டம் போன்று, பெட்ரோலிய நிறுவனங்கள் மேலும் பலகுழாய்களை பதிக்கும் திட்டங்களை இதேபகுதியில் விளைநிலங்களின் வழியாகச் செயல்படுத்த தயாராவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வாக, குஜராத் மற்றும் வளர்ந்த நாடுகளைப் போன்று பட்டா நிலங்களை மத்திய, மாநில அரசுகள் விலைக்கு வாங்கி அரசு நிலமாக மாற்றியமைத்து, அதன் வழியாக எரிவாயு குழாய்களையும், மின்சார உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் போன்ற அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளலாம் எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய பெட்ரோலியம் மினரல்ஸ் பைப்லைன் திட்டம் 1962-ல் உள்ள பயனாளியின் உரிமை (right of user)  என்ற பிரிவையும், உயர்மின் கோபுரங்கள் அமைத்திட 1882 ஆம் ஆண்டு டெலகிராபிக் சட்டத்தில் உள்ள சரியான வழி (right of way) என்ற பிரிவையும் அறவே நீக்கிடவும், கெயில் திட்டத்தை நெடுஞ்சாலை வழியாகச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...