தமிழ் அறிஞர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் - சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்

கோவை, டிசம்பர் 17

தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும், தமிழை வளர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர். மகாதேவன் தெரிவித்தார்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 5-ம் ஆண்டு விழா இன்று கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 50௦-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவிற்கு அவ்மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார். அவர் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் அவர் பேசுகையில், ” உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் சிறந்த மொழி, பழமையான மொழி, செம்மொழி தமிழ் தான். பல நாடுகளில் உள்ள தொன்மையான மொழிகள் அழிந்துவிட்டன, அதில் சில நாடுகளில் மட்டுமே தாய் மொழியை மீட்டெடுக்க மக்கள் பாடுபட்டு அவர்களது தாய் மொழியை மீட்டெடுத்துள்ளனர். இதுபோன்ற நிலைமை தமிழுக்கு வந்துவிட கூடாது என்பதற்காக இவ்மையம் உருவாக்கப்பட்டது.

தமிழை காப்பாற்ற தமிழர்கள் முடிந்த வரையில் தங்கள் இல்லங்களில் தமிழ் பேசவேண்டும், குழந்தைகளை தமிழில் பேச அனுமதிக்க வேண்டும். சில பள்ளிகூடங்களில் பள்ளி வாளகம் மட்டுமின்றி மாணவர்கள் வீட்டுக்கு சென்றால் கூட அங்கேயம் ஆங்கிலம் தான் பேச வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் இந்த நிலைமை மாற வேண்டும்.

தமிழை காக்க தமிழுக்காக பாடுபடும் தமிழ் அறிஞர்களை பாராட்டி ஊக்கம் அளிக்கம் வேண்டும் அதனை இவ்மையம் செய்து வருகிறது,” என்றார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர். மகாதேவன் கலந்துகொண்டு தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். தமிழ் தாத்த உ.வே.சா தமிழறிஞர் விருது முனைவர் சிலம்பொலி செல்லப்பனாருக்கும், தமிழ்ப் படைப்பாளர் விருது எழுத்தாளர் வண்ணநிலனனுக்கும், டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுரைத் தமிழ் தொண்டன் விருது முனைவர் க. மணி அவர்களுக்கும் வழங்கப்பட்டன.

நீதியரசர் ஆர். மகாதேவன் பேசுகையில், ” அக்காலத்தில் தமிழுக்காக பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களை அவர்கள் வாழும் காலத்தில் போற்றப்படவில்லை ஆனால் தற்போது அவர்களை நாம் போற்றுகிறோம். தமிழுக்காக பாடுபடுவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் வாழும் காலத்திலேய போற்ற வேண்டும் அந்த பணியை இவ்மையம் சிறப்பாக செய்துள்ளது,” என்றார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...