நகைக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை : திருட்டு நகையை வாங்கியவரையும் 2 ஆண்டு சிறையில் அடைக்க உத்தரவு

கோவை, டிசம்பர் 18

கோவை அருகே 35 சவரன் நகையைக் கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், திருட்டு நகையை வாங்கியவரையும் 2 ஆண்டு சிறையில் அடைக்க ஆணையிடப்பட்டுள்ளது. 

மணியகாரம்பாளையம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம்(49). இவர், தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். வெளியூரில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் உறவினரைக் கடந்த 3.10.2011 அன்று பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் சென்று பார்த்து விட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸார், இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இதனிடையே, கடந்த  3.12.2011 அன்று காரைக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பைக்கில் வந்த 3 பேரைச் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். அப்போது, கோவை சரவணம்பட்டி, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, காரைக்குடி போலீசார், கோவை தனிப்படையினருக்கு தகவல் கொடுத்தனர். தனிப்படையினர் காரைக்குடி சென்று கொள்ளையர்களை கோவை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது கொள்ளையில் ஈடுபட்டது, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன்(30), காரைக்குடி சூடாமணி நகரைச் சேர்ந்த ரகுராமன்(31), அறந்தாங்கியை சேர்ந்த சின்னையா மகன் முத்துக்குமார் என்பது தெரியவந்தது. 

மேலும், கோவை மணியகாரம்பாளையத்தில் கொள்ளையடித்த 35 பவுன் நகையைச் சென்னை டி நகரில் உள்ள நகை கடை உரிமையாளர் வினய்குமார்(30) என்பவருக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, வினய்குமாரை போலீசார் கைது செய்தனர்

இது தொடர்பான வழக்கு கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே ஜாமீனில் வந்த ராகுராமன் தலைமறைவானார். போலீசார் ரகுராமை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டன், ராகுராமன், முத்துக்குமார் ஆகிய 3 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், திருட்டு நகையை வாங்கிய நகைக்கடை உரிமையாளர் வினய்குமாருக்கு 2 ஆண்டு சிறை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி விஜயா தீர்ப்பளித்தார். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...