ஈஷா சோழா கோப்பைக்கான இறுதிப்போட்டிகள் ஆதியோகி சிலை முன்பு நடத்த ஏற்பாடு

கோவை, டிசம்பர் 19

ஈஷா அவுட்ரீச் மற்றும் சோழ மண்டலம் குழுமம் இணைந்து நடத்தும் ஈஷா சோழா கோப்பைக்கான இறுதிப்போட்டிகள் ஆதியோகி சிலை முன்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிராம மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஈஷாஅவுட்ரீச், கிராம இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஈஷா சோழா கோப்பைக்கான வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகளை கடந்த 9-ம் தேதி முதல் நடத்தி வருகிறது. சுமார் 700 கிராமங்களில் இருந்து 320 வாலிபால் மற்றும் 58 த்ரோபால் அணிகள் கலந்து கொண்டன. சுமார் 3,500 ஆண்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த அணிகளில் இடம்பெற்றனர்.

புதுச்சேரியிலும், தமிழகத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, திருச்சி, விருத்தாசலம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களின் கிராமப்புற அணிகளுக்கு நடைபெற்ற போட்டிகளின் காலிறுதி, அரைஇறுதிச் சுற்றுகள் வரும் 20, 21-ம் தேதிகளில் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 21-ம்தேதி இறுதிசுற்று நடைபெறும். வெற்றிபெரும் அணிகளுக்கு ஈஷா சோழா கோப்பையும் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

டிசம்பர் 21-ம்தேதி நடக்கும் ஆண்களுக்கான வாலிபால் மற்றும் பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் வரலாற்று சிறப்புமிக்க 112 அடி ஆதியோகி திருவுருவச்சிலை முன்னிலையில் காலை 8 மணி முதல் நடக்கிறது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...