மாவோயிஸ்ட் சைனி நீதிமன்றத்தில் ஆஜர்

திருப்பூர், டிசம்பர் 20

திருப்பூரில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சைனி நீதிமன்றத்தில் ஆஜர் - கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றம் வழக்கை காலதாமதப்படுத்துவதாக புகார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். 

இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களான ரூபேக்ஷ், அவரது மனைவி சைனி,மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த அனூப்,கர்நாடகா  மாநிலத்தை சேர்ந்த வீரமணி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் போலீசாரின் விசாரணையில் இயக்கத்தின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் ரூபேக்ஷ் மற்றும் அவரது மனைவி சைனி ஆகிய இருவரும் திருப்பூர் எம்.எஸ், நகரில் தங்கி இருந்த போது முறைகேடாக ஆவணங்களை கொடுத்து சிம்கார்ட் வாங்கி பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்தது. 

இதனை அடுத்து முறைகேடாக சிம்கார்ட் பயன்படுத்தியதாக திருப்பூரில் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து இவ்வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் இன்று கோவை மத்திய சிறையில் இருந்து  சைனி பலத்த போலீஸ் பாதுகாப்புடன்   நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். 

வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனிடையே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சைனி தனது வழக்கை நீதிமன்றம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காலம் தாழ்த்தி வருவதாக புகார் தெரிவித்தார்.

  சைனி பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...