'கருப்பு பணம் பற்றிய போதுமான அடிப்படை அறிவு மக்கள் மத்தியில் இல்லை'

கோவை, டிசம்பர் 21

'கருப்பு பணம் பற்றிய போதுமான அடிப்படை அறிவு மக்கள் மத்தியில் இல்லை. அதனால் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்வியை பற்றி கூட அறியாமல், கருப்பு பணம் ஒழிந்துவிட்டதாக நம்புகிறார்கள் என்று மாற்று வளர்ச்சி மையத்தின் நிறுவனர், திரு. ஜெ. ஜெயரஞ்சன் வருத்தப்பட்டார். உலக மனிதாபிமானக் கழகம் சார்பில், 'பொருளாதார தி்ட்டங்களால் நாம் வாழ்ந்தோமா? வீழ்ந்தோமா?' என்ற தலைப்பில், பொருளாதரக் கொள்கைகளின் தாக்கம் பற்றிய கருத்தரங்கம் , புதன்கிழமை மாலை நடைபெற்றது.



இந்த கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய ஜெயரஞ்சன் கூறியதாவது:

அரசியல்வாதிகள் பொதுமக்களை ஏமாற்றுவதற்காக தினமும் ஒரு பொய்யான புள்ளி விவரங்களை பட்டியலிட்டு அந்த தோல்வியை மறைக்கப் பார்க்கிறார்கள். இந்நிலையில், அரசு சேவைகள் அனைத்தும் தனியார்மயம் ஆக்கப்பட்டு வருகிறது. இதனால் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை சென்றடையும். முதலாளித்துவ கொள்கைகள் வெளிப்படையாகவே அனைத்து துறைகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் இயற்கை வளமும், மனித வளமும் உலகை கட்டுப்படுத்தும் பெரும் பணக்கார முதலாளிகளால் சுரண்டப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக மத்திய மற்றும் மாநில அரசுகளும், உள்ளூர் முதலாளிகலும் செயல்படுகின்றனர்' என்று கூறினார்.



கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசிய எழுத்தாளர் பாமரன், 'கல்வியின் பெருமை அறிந்த மனிதன், மணலில் எழுதி பழகினான். பின், எழுத்துக்களை அச்சுக்களில் வடித்து வாசித்தான். ஊரில் வாசிக்கத் தெரிந்த ஒரு நபர் முச்சந்தியில் உள்ள விளக்கின் அடியில் அமர்ந்து, ஊர் மக்களுக்கு நாளிதழ்களை வாசித்துகாட்டுவார். இப்பொழுது நாம் நவீன முறைகளில் கல்வி கற்றுகொண்டிருக்கிறோம். இருந்தும், பொருளாதாரம் பற்றிய அறிவு நம்மிடம் மிகக் குறைவு. நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்குவகிக்கும் பொருளாதாரம் பற்றி அறிந்துகொள்ள இதுபோன்ற கருத்தரங்கம், தொடர்ந்து நடத்தப்படும்' என்று கூறினார்.



உலகமயமாக்கல் குறித்து உரையாற்றிய பொருளாதார வல்லுநர் செளந்தரன், 'உலகமயமாக்கலால் அதிகம் பயனடைந்தவர்கள் நடுத்தர மக்கள், ஆனால் பொருளாதாரம் மிகப்பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது' என எச்சரித்தார்.



மேலும் அவர் கூறியதாவது, 'அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், சீனாவிற்கு அடுத்த நிலையில் இந்தியாவை தங்களது சந்தைக்கான நாடுகளாக பார்க்கிறது. எல்லா துறைகளிலும் வெளிநாடுகளின் முதலீடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மருத்துவம் மற்றும் உயர்கல்வி சேவைகளை தனியார் வசம் கொடுப்பதால், வெளிநாட்டினரின் ஆதிக்கம் அதிகரிக்கும், எனவே பொருளாதாரமும் பொதுமக்களும் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும். அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவின் நிதித் துறையை ஆகிரமிக்க தொடங்கியுள்ளனர். இதுபோன்ற பெரும் ஆபத்துகளை உணராமல் பொதுமக்கள் உள்ளனர், கப்பல் பாறையை முட்டும் போதுதான் ஆபத்து புரியும்' என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற பொருளாதார நிபுனர்களும், பொதுமக்களும், பொருளாதாரம் சார்ந்த தங்களின் சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...