எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் புகைப்படக் கண்காட்சி நீலகிரியில் துவக்கம்

நீலகிரி, டிசம்பர் 22

நீலகிரி மாவட்டத்தில் வருகின்ற 30ம் தேதியன்று நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது அரிய புகைப்படக்கண்காட்சி மற்றும் அதிநவீன மின்னணு திரைப்பட வாகனத்தினை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தொடங்கி வைத்தார்.



எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நீலகிரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவின் முன்னேற்பாடாக மாவட்டம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, கலைத்துறை, அரசியல், சிறப்புத்திட்டங்கள் தொடங்கி வைத்தல், முக்கியத் தலைவர்களுடனான அரிய புகைப்படங்கள் என 200-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியானது, இன்று முதல் வருகின்ற 24ம் தேதி வரை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.



மேலும், விழாவினை முன்னிட்டு அருகிலுள்ள மாவட்டங்களான கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனங்களுடன், நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம், நீலகிரி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிட இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.



இவ்வாகனங்கள், தொடர்ந்து, வருகின்ற 29-ம் தேதி வரை திரைப்படங்களும், விழா நடைபெறும் நாளான டிசம்பர் 30 அன்று நீலகிரி மாவட்ட குதிரை பந்தய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியின் நேரலையை மாவட்டத்தின் பலபகுதிகளுக்கும் ஒளிபரப்பப்படவுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...