வால்பாறையில் அதிகரித்துள்ள சிறுத்தைகள் நடமாட்டம் : வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை


கோவை, டிசம்பர் 22

கோவை மாவட்டம் வால்பாறை அருகே எஸ்டேட்டிற்குள் புகுந்து, அங்கு மேய்ந்து கொண்டிருந்த மானை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாலை நேரங்களில் குழந்தைகளை வெளியே விட வேண்டாம் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 



வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தைகளின் அட்டகாசம் தொடர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக, குடியிருப்புக்குள் நுழையும் சிறுத்தைகள், ஆடு, கோழி போன்ற கால்நடைகளைக் கொன்றுவிட்டு செல்கின்றன. கடந்த வாரம் வால்பாறை அடுத்துள்ள அக்காமலை 2வது டிவிசனில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் வீட்டின் பின்புறம் சங்கீதா என்பவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, தேயிலை செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை, நாய்க் குட்டியை பிடிப்பதற்காகப் பாய்ந்த போது சங்கீதாவின் மீது உரசிச் சென்றதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு காலில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் நடைபெறுகிறது. 



இந்நிலையில், நேற்று இரவு வரட்டுப்பாறை எஸ்டேட்டில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை, அங்கு மேய்ந்து கொண்டிருந்த மான் ஒன்றைத் தாக்கி கொன்று, குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள ஒரு பெரிய மரத்தின் மீது வைத்து சாப்பிட்டது. பாதி இறைச்சியை மட்டும் சாப்பிட்ட சிறுத்தை, மீதியை அங்கேயே விட்டுச் சென்று விட்டது. காலையில் இதைப்பார்த்த மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். மீதமுள்ள மானை சாப்பிட மீண்டும் அப்பகுதிக்கு சிறுத்தை வருமா என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். 

இதனால், மாலை மற்றும் இரவு நேரங்களில் குழந்தைகளை வெளியே விட வேண்டாம் எனவும், பொதுமக்கள் இரவு நேரங்களில் கவனமாக செல்லுமாறும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...