துணி துவைக்கும் போது இரண்டு பெண்கள் கிணற்றில் தவறி விழுந்து பலி

கோவை, டிசம்பர் 23

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்துள்ள புஜங்கனூரை சேர்ந்தவர் நீனா வயது 30. அதேபோல் அப்பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் விவசாயி இவரது மகள் அனிதா வயது 20. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ் சி 2ஆம்ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று பகல் 12 மணிக்கு நீனாவும், அனிதாவும் துணி துவைப்பதற்காக கிணற்றுக்கு சென்றார்கள். கிணற்றோரம் 2 பேரும் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள் அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக மண் சரிந்து மண்ணோடு மண்ணாக கிணற்றுக்குள் விழுந்தார்கள்.

இதில் அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்கள். இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் போலீசாரும் தீயணைப்புப்படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தற்போது உடல்களைத்தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...