ஆர்.கே. நகரில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தினகரன் !

டிசம்பர் 24

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் 8835 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

சென்னை ஆர்.கே. நகரின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புக்கு இடையே ராணி மேரி கல்லூரியில் இன்று (டிசம்பர் 24) நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஆர்.கே. நகருக்கு மொத்தம் 4 தபால் வாக்குகள் உள்ள நிலையில் ஒரு தபால் வாக்கு மட்டுமே பதிவானது. அதில் திமுகவே வெற்றி பெற்றது.

அதனைத்தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்களின் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. அதில் முதல் சுற்றில் டி.டி.வி. தினகரன் - 5,339, அதிமுக மதுசூதனன் - 2738, திமுக மருது கணேஷ் - 1181, நாம் தமிழர் கலைக்கோட்டுதயம் - 258, நோட்டா - 122, பாஜக கரு.நாகராஜன் - 66 என வாக்குகள் பெற்றனர். 

பின் இரண்டாம் சுற்று முடிவில் டி.டி.வி. தினகரன் - 10421, அதிமுக மதுசூதனன் - 4521, திமுக மருது கணேஷ் - 2324, நாம் தமிழர் கலைக்கோட்டுதயம் - 459, நோட்டா - 122, பாஜக கரு.நாகராஜன் - 117 வாக்குகள் பெற்றனர்.

மூன்றாம் சுற்று முடிவில் தினகரன் - 15,868, அதிமுக மதுசூதனன் - 7,033, திமுக மருது கணேஷ் - 3,750, நாம் தமிழர் கலைக்கோட்டுதயம் - 459, நோட்டா - 122, பாஜக கரு.நாகராஜன் - 117 வாக்குகள் பெற்றுள்ளனர்.

19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் தற்போது நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...