நாட்டின் முதல் குளிர்சாதன புறநகர் ரயில் சேவை மும்பையில் இன்று தொடக்கம்

டிசம்பர் 25

இந்தியாவில் முதன் முறையாக ஏசி வசதிகள் கொண்ட பெட்டிகளுடன் புறநகர் ரயில் சேவை மும்பையில் இன்று தொடங்கப்பட்டது.

சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் இருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு சாதாரண மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தடங்களில் ஏசி ரயில்களையும் இயக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதன் முதற்கட்டமாக ஏசி வசதி கொண்ட மின்சார ரயில்கள் மும்பையின் சர்ச்கேட் - பொரிவ்லி இடையே இன்று அறிமுகம் செய்யப்பட்டது. குளிர்சாதன வசதி மற்றும் தானியங்கி கதவுகள் கொண்ட 12 பெட்டிகளுடன் இந்தப் புறநகர் ரயில் இயக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சென்னை, கொல்கத்தா, செகந்திராபாத் போன்ற நகரங்களுக்கும் இந்த ‘ஏசி’ வசதி கொண்ட புறநகர் ரெயில்களை விரைவில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ‘ஏசி’ ரயில்கள் இயக்கப்பட்டாலும், பழைய ரயில்களும் வழக்கம் போல இயக்கப்படும் என்று தெரிவித்துள்ள ரயில்வே துறை, இரண்டுக்குமான டிக்கெட் விலையில் மாற்றம் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

மும்பையில் இன்று தொடங்கப்பட்டுள்ள ‘ஏசி’ வசதி கொண்ட புறநகர் ரெயில்கள் சென்னையில் இயங்கி வரும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...