கோவையில் முதன்முறையாக இலவசப் பறை இசை மற்றும் நடனப்பயிற்சி பட்டறை

கோவை, டிசம்பர் 25

கோவையில் முதன்முறையாக இலவசப் பறை இசை மற்றும் நடன பயிற்சி பட்டறை, கோவை ஹோப் கல்லூரியில் உள்ள கிளஸ்டர் திரைப்பட நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சி குறித்து ஆயுதம் கலைகளின் சங்கமத்தின் நிர்வாக அறங்காவலர் விவேக், அறங்காவலர் சரத்குமார் ஆகியோர் கூறுகையில், பறையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், உருமியாட்டம், நெல்பிடியாட்டம், கரகாட்டம், பரதம், தவில், கிராமிய பாடல்கள், நெருப்பு சாகசம், வீதி நாடகம் போன்ற பல கலைகள் நமது தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் ஆகும். தற்போது, இந்த கலைகளில் 90 சதவீதம் அழிந்து வருகிறது. அழிந்து கொண்டு வரும் நமது பாரம்பரிய கலைகளைப் பற்றி இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் வகையில் பல நிகழ்ச்சிகள் எங்கள் அமைப்பு சார்பில் நடத்தி வருகிறோம்.



இதன் மூலம், கலைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதன் முக்கியத்துவம், திறன்களை வெளிக்கொண்டு வருவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். மேலும், இந்த கலைகள் அனைத்தும் நமது நாட்டின் அடையாளங்கள். இதனை மீட்டெடுப்பது எங்களின் குறிக்கோள். இன்று ஒருநாள் முழுவதும் இலவசமாக பறையாட்டம் பற்றி விழிப்புணர்வு மற்றும் இசை, நடன பயிற்சி நடத்துகிறோம். இந்த நிகழ்ச்சி கோவை, அவிநாசி சாலை, ஹோப் கல்லூரியில் உள்ள கிளஸ்டர் திரைப்பட நிலையத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியினை எங்கள் அமைப்புடன் சேஞ்ச் டிரஸ்ட், கோவை கலைக்கூடம் இணைந்து நடத்தினோம். பறையாட்டம் இசையின் ஆதி என்றும் கூறலாம். ஏனெனில், முன்னோர் காலத்தில் சாமியினை அழைக்கப் பறை இசையை வசிப்பர். அதுமட்டுமல்லாது, மருத்துவ வசதி இல்லாத காலத்தில் ஒருவர் உயிருடன் இருப்பது அறிய பறை இசையினை வாசிப்பார்கள். வாசிக்கும்போது அவரது உடல் அசைந்தால் உயிருடன் உள்ளார் என்பது தெரிந்து விடும். எனவே, தற்போது வரை சாவு ஊர்வலத்தில் பறை இசைக்கின்றனர். மேலும், ஆதிமனிதன் தன்னை விலங்கிடம் இருந்து பாதுகாத்து கொள்ள பறை இசை அடித்து விரட்டுவான்.

பறையாட்டம் இசைத்து நடனம் ஆடுவதால் உடற்பயிற்சி செய்யும் செயல் போன்றது. உதாரணமாக, அக்குபஞ்சர், மனோத்துவ மருத்துவ முறை என்பது போன்று பல வரலாறு கூறப்படுகிறது. இந்த கலையினை கல்வியாளர்களும் கற்று கொள்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இந்தக் குழுவில் 8 முதல் 25 பேர் வரை இசைத்து நடனம் ஆட இயலும். தொடர்ந்து கடந்த 5 வருடங்களாக, 12 வகையான கலைகள் குறித்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.

இந்த நிகழ்ச்சியில் விசாரணை திரைப்பட இயக்குனர் ஆட்டோ சந்திரன், தூய்மை இந்தியா திட்டத்தின் அம்பாஸ்டாரும், கோவை குயின், ஐகான் ஆப் கோயம்புத்தூர் போன்ற விருதுகளை வாங்கியவரும், சேஞ்ச் டிரஸ்ட் நிறுவனர் தஸ்லிமா நஸ்ரீன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும், பறை இசை பயிற்சியில் மாணவர்களாகவும் கலந்து கொண்டனர். கோவை மற்றும் அதன் சுற்று பகுதியினை சேர்த்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு, 2 வேளை தேனீர் வழங்கப்பட்டது.

இந்த பாரம்பரிய கலையினை பல நிகழ்ச்சிகளிலும் நடத்தி வருக்கிறோம். நிகழ்ச்சி குறித்த தகவலுக்கு 9843176198 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என்றனர். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...