"ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?" : முன்னாள் மத்திய அமைச்சர் ராசா வருகையையொட்டி கோவையில் தி.மு.க.வினர் வைத்த கட்டவுட்

கோவை, டிசம்பர் 27

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா-வை வரவேற்பதற்காக கோவை சாலைகளில் கட்டவுட் வைக்கப்பட்டுள்ள விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்தார். அவர் சில நாட்களுக்கு முன் தான் 2 G வழக்கில் விடுதலை பெற்றார்.



அவரை வரவேற்பதற்காக தி.மு.க. தொண்டர்கள் காளப்பட்டியில் இருந்து கோவையில்பாளையம் செல்லும் சாலையில் வரவேற்பு பதாகைகளை அமைத்துள்ளனர். 

கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது அவினாசி சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலில் மோதி ரகுபதி என்ற வாலிபர் உயிரிழந்த் சம்பவத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்ததோடு, சாலைகளில் பேனர்கள் வைக்கக்கூடாது என்றும், பேனர்களை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர். 

இந்த நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தினை சேர்ந்த ராசா-வை வரவேற்பதற்காக கோவையில் உள்ள சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, "ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் விவாதத்திற்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...