வனப்பகுதி மலைவாழ் கிராமங்களில் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

கோவை, டிசம்பர் 27

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுவன மேலாண்மை குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வனஅலுவலர் ந.சதீஸ் மாவட்ட கூட்டுவன மேலாண்மைகுழு உறுப்பினர்கள், அனைத்து திட்ட கிராம வனக்குழு உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் வனப்பகுதி மலைவாழ் கிராமங்களில், ஆட்சியர் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, மாவட்ட அளவிலான கூட்டுவன மேலாண்மை குழுவின் மூலம் வனப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தல், பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காரமடை பகுதிகளில் உள்ள வனகிராமங்களான சேத்துமடை, பூச்சிமரத்தூர், நெல்லிமரத்தூர், இருளர்பதி, பாறையன்கோம்பை உள்ளிட்ட கிராமங்களில் 63 பயனாளிகளுக்கு கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது. நம்பர் 4 வீரப்பாண்டி பகுதிக்கு அருகாமையில் பூலப்பதி கிராமத்தில் ரூ. 9.19 லட்சம் மதிப்பில் சூரியஒளியில் இயங்கும் மோட்டார் வசதி செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.  

தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ்கள் உரிய விசாரணையின் பேரில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. வெள்ளருக்கம்பாளையம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேரண், கிணறு கிராமத்தில் 400 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், புதிய நியாயவிலைக் கடை அமைக்க துரித நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்துப்பட்டுள்ளது. தேக்கம்பட்டியில் ரூ. 7.20 லட்சம் மதிப்பில் 20 சோலார் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் நெல்லிமலையில் இருந்து வரும் உபரிநீரை தடுப்பணைகட்டி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.    

தொடர்ந்து, மலைவாழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுடன் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படாத வகையில், அகழிகள் ஏற்படுத்துதல் தொலைதூர வெளிச்சம் தரக்கூடிய டார்ச்லைட்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மலைவாழ் மக்கள் சுயசார்பு அடையும் வகையில், சிறுவன சாகுபடி மேற்கொள்ளவும், தங்களால் உற்பத்திசெய்யக்கூடிய கைவினைப் பொருட்களை சந்தைபடுத்தவும் வனஅலுவலர்கள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இக்கூட்டத்தில், மாவட்ட கூட்டுவன மேலாண்மைகுழுவினரால் வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்து உரியப் பரிசீலனைகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...