குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை- பொதுமக்கள் பீதி

வால்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து யானைகள் நுழைந்து சேதம் செய்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.


வால்பாறை, டிசம்பர் 28

வால்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து யானைகள் நுழைந்து சேதம் செய்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து பல மாதங்களாக காட்டு யானைகள் நுழைந்து வருகிறது. யானைகள், இரவு நேரங்களில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைவதும் குடியிருப்புகளை இடிப்பதும், ரேசன் கடைகளை சூறையாடுவதும் வழக்கமான நிகழ்வாகி விட்டது.

இந்நிலையில், சோலையார் முதல் டிவிசனில் இன்று வழக்கம் போல் தோட்டத் தொழிலாளர்கள் காலை 7.55 மணியளவில் பணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பீல்டு எண் 8-ல் மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றைக் காட்டு யானை பணிக்கு சென்று கொண்டிருந்த அழகம்மாள் (52) என்பவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதனால் அவரது உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சக தொழிலாளர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



இதனிடையே, இந்தச்சம்பவம் குறித்து தகவலறிந்த மானாம்பள்ளி வனத்துறை அதிகாரிகள் சேகர், விஜயன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சோலையார் எஸ்டேட் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சின்கோனா, நீரார்டேம், பன்னிமேடு, பாரளை போன்ற பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...