சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை மூட நடவடிக்கை எடுக்காவிடில் முற்றுகைப் போராட்டம்: திமுக

கோவை, டிசம்பர் 30

கோவை - திருச்சி சாலையில் உள்ள நஞ்சப்பா நகர் குடியிருப்பில் கேபிள் பதிக்க தோண்டப்பட்டு ஒரு மாதமாக மூடப்படாமல் இருக்கும் குழிகளை உடனடியாக மூடாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான நா.கார்த்திக் தெரிவித்துள்ளார். 

கோவை - திருச்சி சாலையில், குளத்தேரி அருகே நஞ்சப்பா நகர் குடியிருப்பு பகுதியில், கேபிள் பதிக்க தனியார் நிறுவனம் (ஏர்டெல்) மாநகராட்சியிடம் டெண்டர் எடுத்துள்ளது. இந்தப் பகுதியில் கேபிள் பதிக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழி தோண்டியுள்ளனர். இந்தப் பணிகள் முடிந்தும், தெருக்களில் உள்ள குழிகள் 2 மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால், குடிநீர் குழாய்கள் உடைந்ததாலும், குடிநீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ-விடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, எம்எல்ஏ நா.கார்த்திக் நஞ்சப்பா நகர் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள் அவரிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து, எம்எல்ஏவின் வருகை குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், டெண்டர் எடுத்த நிறுவனமும் வருத்தம் தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக குழியை மூடுவதாக உறுதியளித்தனர். 



இதுதொடர்பாக எம்எல்ஏ நா.கார்த்திக் கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இப்பகுதியில் குழி தோண்டப்பட்டு கிடக்கின்றது. இதேபோல, மாநகராட்சியில் பல பகுதிகள் இதே நிலையில் தான் உள்ளது. நஞ்சப்பா நகரில் உள்ள இந்த குழிகளை உடனடியாக மூடுவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். என்றார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...