புத்தாண்டு தினவிழா நிகழ்ச்சிக் கொண்டாட்டம் தொடர்பான காவல்துறையின் அறிவுரைகளும், விதிமுறைகளும்.....


கோவை, டிசம்பர் 31

2018 புத்தாண்டு தினவிழா நிகழ்ச்சிகள் கொண்டாட்டம் தொடர்பான கோவை மாநகரக் காவல்துறையினரின் அறிவுரைகள் பின்வருமாறு :-

1) பொதுமக்கள் தங்களது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டுநல் கூடாது

2) மதுகுடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுதல் கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்டுபவர் மீது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வது உட்படஉரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

3) புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களைக் கேலி, கிண்டல் செய்யக்கூடாது

4) பொதுஇடங்களில், சாலைகளில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது

5) பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளுதல் மற்றும் குறும்பான செயல்களைச் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

6) அனுமதிக்கப்பட்ட ஓட்டல் பார்கள், மதுபானக்கடைகளை குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு மேலாக செயல்பட அனுமியில்லை. மீறுபவர்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

7) உணவகங்கள், பேக்கரிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் திறந்திருக்கக்கூடாது.

8) இன்று இரவு 11 மணி முதல் நாளை (ஜன.,1) அதிகாலை 3 மணிவரை புதிதாக திறக்கப்பட்டுள்ள டாக்டர் நஞ்சப்பா சாலை மேம்பாலம் உள்பட அவினாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம் மற்றும் சுங்கம், உக்கடம் பைபாஸ் மேம்பாலங்களில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. 

2018 புத்தாண்டு தினவிழா நிகழ்ச்சிகள் கொண்டாட்டம் தொடர்பாக லாட்ஜ், வணிக வளாகங்கள், கிளப் மற்றும் விடுதிகள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் :-

1) புத்தாண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் காவல்துறையின் முன் அனுமதிபெற்றே நடத்தப்பட வேண்டும். 

2) புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் நடக்கும் இடங்களில் மேடைகளுக்கு தாங்கும்திறன் சான்றிதழ், மின்சாதனங்கள் குறித்த சான்றிதழ், தீயணைப்புத்துறை சான்றிதழ்கள் முன்னரே பெறப்பட வேண்டும். 

3) அவசரகால வழிகள் இருத்தல் வேண்டும். 

4) ஆபாச நடனங்கள் மற்றும் கலாச்சார சீரழிவு ஏற்படுத்தும் விதமான நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை.

5) வானவேடிக்கைகள் உரிய அனுமதியின்றி நடத்தக்கூடாது. 

6) நிகழ்ச்சிகளுக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும். 

7) புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஒலிபெருக்கி கருவிகள், 45 ஒலிஅளவிற்கு மேலாக இருத்தல் கூடாது.

8) புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் நபர்களை அவர்களுடைய இடத்திற்குக் கொண்டுசென்று சேர்ப்பது நிகழ்ச்சி நடத்துபவர்களின் பொறுப்பாகும். 

9) தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களைப் பயன்படுத்துதல் கூடாது.

10) புத்தாண்டு என்பதற்காக எந்த ஒரு சிறப்பு சலுகையும், யாருக்கும் வழங்கப்படமாட்டாது. சட்டவிதிமுறைகளைப் பின்பற்றி புத்தாண்டு தின கொண்டாட்டங்களை எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாவண்ணம் சாலை விதிகளை மதித்தும் விபத்தில்லாத, குற்றமில்லாத, மகிழ்ச்சியான, பாதுகாப்பான புத்தாண்டு தினமாகக் கொண்டாட காவல்துறையின் நல்வாழ்த்துக்கள்.

பொதுமக்கள் காவல்துறையின் வேண்டுகோளின்படி நடந்துகொண்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...