கோவையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிய வாகனங்கள்

கோவையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் வாகனங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, டிசம்பர் 31

கோவையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் வாகனங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் தொடங்கி, வரதராஜபுரம் வரையில் உள்ள காமராஜர் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த மூன்று தினங்களுக்கு முன் துவங்கியது. 

தினமும் இரவு நேரங்களில் மட்டும் அப்பகுதியில் பணிகள் நடைபெறுகின்றன. 

அவ்வாறு, சிங்கநல்லூர் பேருந்து நிலையம் முன்பு தோண்டப்பட்ட குழி மண் கொண்டு மூடப்பட்டது. குழி தோண்டும்போது குடி நீர் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக குழியின் மேல்புறம் தண்ணீர் தேங்கியது. இதில், குழியின் மீது போடப்பட்ட மண் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. 



இதையறியாமல், இன்று காலை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஒரு பேருந்தும், மினி லாரி ஒன்றும் மண் மேட்டின் மீது ஏறியது. வாகனங்களின் பாரம் தாங்காமல் மண் தரைக்குள் இறங்கியதில் இரண்டு வாகனங்களும் பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்ட குழியின் இறங்கின.



இந்த விபத்தில் அதிஷ்ட வசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வாகனங்களை மீட்டனர். 

இந்த சம்பவத்தால் சிங்காநல்லூர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 



Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...