ப்ரோஷோன் மாலில் ஜன., 5-ம் தேதி முதல் 3 நாள் நடக்கும் ”அங்காடி-18” மாபெரும் ஷாப்பிங் திருவிழா

இளைஞர்களிடையே தொழில் முனையும் ஆர்வத்தையும், திறமைகளையும் மேம்படுத்தும் நோக்கில் கோவை ப்ரோஷோன் மாலில் வரும் 5-ம் தேதி முதல் 3 நாள் நடக்கும் மாபெரும் ஷாப்பிங் திருவிழா தொடங்குகிறது.

கோவை, ஜனவரி 3

இளைஞர்களிடையே தொழில் முனையும் ஆர்வத்தையும், திறமைகளையும் மேம்படுத்தும் நோக்கில் கோவை ப்ரோஷோன் மாலில் வரும் 5-ம் தேதி முதல் 3 நாள் நடக்கும் மாபெரும் ஷாப்பிங் திருவிழா தொடங்குகிறது.

கேசிடி மேலாண்மைத் துறை மாணவர்களால் அனைத்து தொழில் மேலாண்மையியல் மாணவர்களுக்காகவும் நடத்தப்படும் விற்பனைத் திருவிழாவே அங்காடி-18 ஆகும். இது ஜனவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையில் ஸ்வாரஸ்யமான முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது பங்கேற்கும் மாணவர்களின் எண்ணங்களுக்கு உயிரூட்டும் தளமாகவும், சுயதொழில் செய்வதன் சாதக, பாதகங்களின் அனுபவ அறிவைப் பெற்று, அதன் மூலம் வியாபார யுக்திகளால் லாபம் ஈட்டும் களமாகவும் திகழும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

அங்காடி-18-ஆனது பல்வேறு உணவு வகைகள், சிறுவர்களுக்கான கேளிக்கை நிகழ்வுகள், திறன் கொணர் போட்டிகள், இயற்கை சார்ந்த பொருட்கள், உடைகள், அணி மணிகள், வீடு உபயோக பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் என பலதரப்பட்டவற்றின் விற்பனை நிலையமாக 10,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இங்கு வெவ்வேறு பிஸினஸ் பள்ளி (BUSINESS SCHOOL) மாணவர்கள் பங்கெடுப்பதால், அவர்கள் தங்களது வியாபார யுக்திகளை மேம்படுத்தவும், வெளிப்படுத்தவும் அங்காடி ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.

கேசிடி மேலாண்மைத் துறை என்பது குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் ஒரு அங்கமாகவும், சமூக அக்கறை கொண்ட தொழில் முனைவோர்களையும், முன்னோடிகளையும் உற்பத்தி செய்யும் மையமாகவும் திகழ்கிறது. இந்நாள்வரை குமரகுரு கல்லூரி வளாகத்திற்குள்ளாகவே நடைபெற்ற அங்காடி நிகழ்வானது, முதன்முறையாக கல்லூரிகளுக்கிடைப்பட்ட நிகழ்வாக, பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் கோவை ப்ரோஷோன் மாலில் நடைபெற உள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக அங்கேயே பெரிய அளவில் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

வெவ்வேறு விதமான 75 விற்பனையகங்கள் மூலம் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு, தொழில் முனையத் தேவையான திறன்களை ஊட்டி, வியாபார நேர்த்திகளைக் கற்பிப்பதே அங்காடி-18ன் சீரிய நோக்கமாகும்.

இந்த மாபெரும் விற்பனைத் திருவிழாவானது மூன்று நாட்களிலும் காலை 11 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணி வரையிலும் நடைபெறும். அனுமதி அனைவருக்கும் இலவசம். இந்நிகழ்வை வருகையாளர்களுக்கு என்றென்றும் பசுமையான நினைவாக்கும் வகையில், அங்காடியானது, கோவை விழா அமைப்போடு கைகோர்த்து செயலாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...