வால்பாறை பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

வால்பாறை அருகே சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் வட்டாட்சியர் உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டது.


வால்பாறை, ஜனவரி 3

வால்பாறை அருகே சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் வட்டாட்சியர் உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டது.

வால்பாறை பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மண் கடத்தப்பட்டு அப்பகுதியில் கட்டிட வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், முறைகேடாக விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திற்குப் புகார் வந்ததையடுத்து வட்டாட்சியர் சு.குணசேகரன் தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, நல்லகாத்து சுங்கம் பகுதியில் வாகனத்தில் முறைகேடாக ஆற்று மணல் அள்ளப்படுவது கண்டறியப்பட்டது.



இதனிடையே, அதிகாரிகளைக் கண்ட மணல் கொள்ளையர்கள் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் மேற்படி மணல் ஏற்றிக்கொண்டிருந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வால்பாறைக்கு உட்பட்ட சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "வால்பாறை நகராட்சி ஒப்பந்தப்படி கட்டுமாகப் பணிகளுக்கு கரூர் மணல் தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், ஆற்று மணலைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கட்டிடம் உறுதியற்ற நிலையில் உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் குறைகிறது. இந்த சட்டவிரோத செயல்களுக்கு சில அரசியல் பிரமுகர்களும் உடந்தையாக உள்ளனர்.



தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...