‘நதிகளை மீட்போம்’ இயக்கத்திற்கு தொடரும் ஆதரவு - மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வரை இளைஞர்கள் சைக்கிள் பயணம்

கோவை, ஜனவரி 04

‘நதிகளை மீட்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நதிகளை மீட்போம் இயக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 20 வாலிபர்கள் தமிழகம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.  



யூடிஆர் (UTR) சைக்ளிங் என்று அழைக்கப்படும் இந்தக் குழு மகாராஷ்டிரா மாநிலம் உட்கிர் நகரிலிருந்து இந்த சைக்கிள் பயணத்தை டிசம்பர் 16-ம் தேதி துவங்கினர். சுமார் 1,600 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்டு ஜனவரி 1-ம் தேதி ராமேஸ்வரத்தை அடைந்த இக்குழுவினர் இன்று (ஜன.,04) கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை புரிந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் உட்கிர் நகரிலிருந்து திருப்பதி வரை சுமார் 800 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொள்வது இக்குழுவின் வழக்கம். ஆங்கிலப் புத்தாண்டு அன்று திருப்பதியை அடையும் இவர்களது வழக்கமான பயணம் இவ்வாண்டு சற்று வித்தியாசமாக அமைத்தது. நதிகளை மீட்போம் இயக்கத்தைப் பற்றி கேள்விப்பட்ட இக்குழு இந்த உன்னத நோக்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இவ்வருடம் தங்களது சைக்கிள் பயணத்தை உட்கிர் மாநிலத்தில் தொடங்கி தமிழகத்தின் ராமேஸ்வரம் வரை நிகழ்த்தினர். 

தங்களது வழக்கமான பயணதூரத்தை விட இருமடங்கு அதிகதூரமாக சுமார் 1,600 கி.மீ. தூரத்தை 16 நாட்களில் கடந்து ராமேஸ்வரத்தை அடைந்தனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்த இவர்கள், புதுச்சேரியை அடைந்த போது புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை இக்குழுவை சந்தித்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்குழுவை நதிகளை மீட்போம் இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள் ஒவ்வொரு ஊரிலும் சிறப்பாக வரவேற்றனர் என்றும், தமிழகம் மற்றும் புதுவை தன்னார்வலர்கள் தங்கள் வருகையைச் சிறப்பாக விழாக்கோலத்துடன் கொண்டாடினர் என்று குழுவினர் குறிப்பிட்டனர். மேலும், தமிழகத்தின் சிறுஊர்கள் மற்றும் கிராமங்களில் இருந்தும் மக்கள் தங்களை உற்சாகமாக வரவேற்றது நெகிழ்வாக உள்ளதாகக் கூறிய குழுவினர், நதிகளை மீட்போம் இயக்கத்தின் ஒருபகுதியாக தங்கள் ஊரில் தற்போது 300 மரக்கன்றுகள் நட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...