போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம்: பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - வைகோ

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 5

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசியவர் கோவை மாநகராட்சியில் சொத்து பெயர் மாற்றம், குப்பை வரி, குடிநீர் வைப்பு தொகை உள்ளிட்ட வரி உயர்வை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் கோவையில் இயங்கி வரும் இந்திய அரசு அச்சகம் இடமாற்றம் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கதக்கது எனவும் இம்முயற்சியை கைவிட வேண்டுமெனவும் தெரிவித்தார். மத்திய அரசு பாசிச போக்குடன் செயல்படுவதாகவும், தமிழக வாழ்வாதராம் ஒவ்வொன்றாக பறிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

பேருந்து தொழிலாளர் வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு அவதியை ஏற்படுத்தியுள்ளது எனவும் அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல் பேச்சுவார்த்தை மூலம் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனவும் வைகோ வலியுறுத்தினார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...