20 சதவிகித வளர்ச்சியை எட்டிய நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்- தலைவர் பெருமிதம்

இந்தியாவின் மாபெரும் பொதுக் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், 2017 டிசம்பர் 31ம் நாளுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்தில் 20 சதவிகித வணிக வளர்ச்சியை எட்டியுள்ளது என்று நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. ஜி.சீனிவாசன் கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கோவை, ஜனவரி 05

இந்தியாவின் மாபெரும் பொதுக் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், 2017 டிசம்பர் 31ம் நாளுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்தில் 20 சதவிகித வணிக வளர்ச்சியை எட்டியுள்ளது என்று நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. ஜி.சீனிவாசன் கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.



இதுகுறித்து அவர் கூறுகையில், "கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் ரூ.14,000 கோடியாக இருந்த வணிகம் இந்த ஆண்டில் ரூ.16,800 கோடியாக உயர்ந்துள்ளது. 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான இந்திய அளவிலான வணிகம் 26 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. பொதுமக்களிடையே காப்பீட்டுத் திட்டங்களை வாங்கும் அளவு அதிகரித்துள்ளதின் காரணமாக இன்னும் சில காலத்துக்கு மேலும் கூடுதலான வணிக வளர்ச்சியை எட்ட முடியும் என்று இந்நிறுவனம் நம்புகிறது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சில நாட்களுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மூன்று லட்சம் கோடி வணிக மதிப்புள்ள காப்பீட்டுத் திட்டமொன்றை வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் நான்கு கோடி பொதுமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்கான பிரீமியம் தொகை ரூ.1,200 கோடியாகும்.

வாடிக்கையாளர்களின் மேலான ஒத்துழைப்பின் காரணமாக இந்நிறுவனம் பொதுக் காப்பீட்டுத் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. இந்தியாவின் பெரும்பாலான விமானப் போக்குவரத்து நிறுவனங்களை காப்பீடு செய்துள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சமீபத்தில் டெக்கான் ஏவியேஷன் நிறுவனத்தையும் காப்பீடு செய்திருக்கிறது.

செப்டம்பர் 2017ல் முடிவடைந்த முதல் அரையாண்டில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ரூ.1,248 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 161 சதவிகிதம் அதிகமாகும். 2,24 அளவிலான கடன் தீர்க்கும் சக்தியுடனும் ரூ.3,7000 கோடி நிகர மதிப்பிலான சொத்துக்களுடனும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் இந்தியக் காப்பீட்டுச் சந்தையில் உறுதியான நிறுவனமாக விளங்குகிறது".

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோவை குறிச்சியில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் புதிய கிளையை ஜி.சீனிவாசன் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். விழாவில் தலைமை மண்டல மேலாளர் என். வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...