ஜெயலலிதா மரணம் விவகாரம் : ஷீலா பாலகிருஷ்ணனுக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு விசாரணை நடத்தி வரும் ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

ஜனவரி 05

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு விசாரணை நடத்தி வரும் ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

முன்னாள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம், தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள கலசமகாலில் செயல்பட்டு வரும் அந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலிதாவின் உறவினர்கள், அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை ஆணையத்தின் சம்மனை ஏற்று, தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளரும், முன்னாள் சிறப்பு ஆலோசகருமான ஷீலா பாலகிருஷ்ணன், கடந்த டிசம்பர் மாதம் 20-ந்தேதி நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, விளக்கத்தைப் பதிவு செய்துகொண்டார்.

இந்நிலையில் விசாரணை ஆணையம் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு தற்போது மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. அவரிடம் மேலும் விளக்கங்கள் பெற வேண்டியிருப்பதால், வரும் 11-ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...