சொத்துக்காக பெற்றோரை கொன்ற மகன் கைது

திருப்பூர் ஜனவரி 5

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தோட்டத்தில் தனியாக இருந்த கணவன் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்- சொத்துக்காக மகனே தாய் தந்தையரை கொடூரமாக கொலை செய்து  நாடகமாடியது அம்பலம்.கொலை வழக்கில் மகன் உட்பட 3 பேர் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை

திருப்பூர் மாவட்டம் காங்க்யத்தை அடுத்த மிதிப்பாறையை அடுத்துள்ளது சூலக்கல் புதூர். இப்பகுதியில் உள்ள தோட்டத்து சாலையில் வசித்துவருபவர் பழனிச்சாமி, 60 வயதான பழனிச்சாமி தனது மனைவி கண்ணம்மாளுடன் வசித்துவந்துள்ளார். 

மேலும் விவசாயியான பழனிச்சாமி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு சொந்தமான 22 ஏக்கர் தோட்டத்தில் மாந்தோப்பை பராமரித்து வந்துளளார். மேலும் தம்பதியருக்கு பெரியசாமி என்கிற மகனும், கண்ணம்மாள் எப்கிற மகளும் உள்ள நிலையில் இருவரும் திருமணமாகி திருப்பூர் வாய்க்கால் மேட்டில் பகுதியில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் தனியாக வசித்து வந்த தம்பதியரின் வீட்டிற்கு இன்று காலை சென்ற பால்காரர் வீட்டின் முன்புறமாக கண்ணம்மாள் மற்றும் கணவர் பழனிச்சாமி ரத்தவெள்ளத்தில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்தார்.

 இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே முதல்கட்ட விசாரணையில் தனியாக தோட்டத்து சாலையில் இருந்த தம்பதியரை நோட்டமிட்டு பின்னர் இரவு சுமார் 11 மணி அளவில் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் வெளியில் கயிற்று கட்டிலில் தூங்கி கொண்டிருந்த பழனிச்சானியை கொடூரமாக அரிவாளால் தலையில் இரண்டு இடங்களில் கொடூரமாக வெட்டியுள்ளனர். மேலும் இவரது மனைவி கண்ணம்மாளையும் வெட்டி கொலை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

போலீசாரின் தீவிர விசாரணையில் சொத்து சம்பந்தமாக பழனிச்சானிக்கும் அவரது மகனுக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிய வந்தது.மேலும் தோட்டத்தில் வேலைபார்ர்து வந்த யுவராஜ் மற்றும் கார் டிரைவர் நாகராஜ் ஆகிய இருவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் பெற்ற மகனே தாய் தந்தையரை கொன்று நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. 

தந்தைக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்த்திற்கு ஆசைபட்டு இது குறித்து பழனிச்சாமியிடம் பெரியசாமி கேட்டதற்கு மறுத்துவிடவே, இதனால் ஆத்திர்மடைந்து தோட்டத்த்தில் வேலை செய்யும் யுவராஜ் மற்றும் கார் ஓட்டுனர் நாகராஜ் ஆகிய இருவரையும் வைத்து தந்தையை கொலைசெய்ய திட்டமிட்டுந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் இதனை மறைக்க திருச்செந்தூருக்கு செல்வதாக கூறி இரவே பெரியசாமி சென்ற நிலையில் காலை ஒன்றுமே நடக்காதது போல் பெற்றோர் இருவரும் கொலையான இடத்தில் அழுதுகொண்டே நாடகமாடியுள்ளார். இருவரின் வாக்குமூலத்தின் முலம் முருகேசை கைது செய்த போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பெற்ற மகனே சொத்துக்காக தாய் தந்தையரை கொடூரமாக ஆட்களை வைத்து கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையெந் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...