பொங்கலுக்குப் பிறகு மத்திய சுங்கத்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம்

கோவை, ஜனவரி 05

பொங்கல் பண்டிகைக்கு பிறகு கோவையில் செயல்பட்டு வரும் மத்திய சுங்கத்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக கோவை சுங்கம் மற்றும் கலால் வரித்துறை ஆணையர் சீனிவாசராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் செயல்பட்டு வரும் சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம் செய்வது குறித்த முடிவு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே முடிவு செய்யப்பட்டது. பல்வேறு காரணங்கள் இடமாற்றம் செய்வது தாமதமாகியுள்ளது. என்றார். 

இதனிடையே ஆனால், கோவை விமான நிலையத்தின் மூலம் அதிகமான சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுவதால், உற்பத்தி நிறுவனங்கள் மத்திய சுங்கத்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம் செய்வதை  திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தினர். 

ஆனால், உற்பத்தி நிறுவனங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. அதேவேளையில், பணியாளர் குறைவு காரணமாக சுங்கத்துறை அலுவலகம் கோவையில் டிசம்பர் 31-ம் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. கோவையில் தற்போது செயல்பட்டு வரும் அலுவலகத்தில், 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், வெளி அலுவலகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், திருச்சிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். 

கோவை மத்திய சுங்கத்துறை அலுவலகமானது, கோவை மற்றும் திருப்பூரைச் சேர்ந்த 4 கண்டெய்னர் வைப்புகளைக் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...