இந்தியாவில் முதன்முறையாக ஓஃபோ நிறுவனத்தின் மிதிவண்டி அறிமுகம்

கோவை, ஜனவரி 06

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் முதன் முறையாக ஓஃபோ (Ofo)  நிறுவனத்தின் மிதிவண்டி அறிமுகம் செய்யப்பட்டது.

மொபைல் பயன்பாட்டின் மூலம் இயக்கப்படும் உலகின் முதன்மையான மிதிவண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, கல்லூரி வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட மிதிவண்டிகள் பயன்படுத்தப்படும். வளாகத்தில் எளிதாகச் செல்லும் பாதையில் மிதிவண்டிகள் கிடைக்கும். எந்த நிறுத்துதல் நிலையங்களும் தேவையில்லை. ஓஃபோவின் மிதிவண்டிகள் பகிர்வு பயனர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

ஸ்ரீ சங்கர் வாணவராயர், இணை தாளாளர், கேசிடி சிறப்பு விருந்தினரையும், ஓஃபோ நிறுவனத்தையும் மற்றும் கேசிடி ஊழியர்களையும் வரவேற்றார்.  கோவை மாநகராட்சி ஆணையர் கே. விஜயகார்த்திகேயன் இந்நிகழ்ச்சியை துவங்கிவைத்தார். 

”இந்த ஆரோக்கியமான கருத்தை நாம் இப்போது ஒரு சிறிய அளவில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கியுள்ளோம், இந்த மாதிரியை நகருக்குள் பிரதிபலிக்கும் திட்டங்களை நாங்கள் கொண்டுள்ளோம். இந்த முயற்சி காற்று மாசு படுவதை குறைக்கும்”  என கோவை மாநகராட்சி ஆணையர் கே. விஜயகார்த்திகேயன் கூறினார். 

பொதுக்கொள்கை மற்றும் தகவல் தொடர்பு இயக்குநரான ரஜர்ஷி சஹாய் கூறுகையில், "குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் எங்கள் மிதிவண்டி பயன்படுத்தப்படுவதைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஜனவரி மாதம் தொடங்கி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு சுத்தமான மற்றும் ஆரோக்கியமான போக்குவரத்து விருப்பத்தை வழங்கும். இந்தத் திட்டம் மூலம், மக்களுக்கு 'சுலபமாகப் பயன்படுத்தக்கூடிய' மிதிவண்டி பகிர்வு அனுபவத்தின் மூலம் மக்களுக்கு வழங்குவதோடு, மிதிவண்டி ஓட்டுதல் தொடர்பான பல்வேறு நன்மைகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் விரும்புகிறோம். கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசிடம் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் மிதிவண்டியினை பயன்படுத்த எந்தக் கட்டணமும் இல்லை”. கூறினார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...