தினகரனின் மீது அவதூறு பரப்புவதாகக் கூறி கமலின் உருவப் படத்தை எரித்த வழக்கறிஞர்கள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகக் கூறி கோவையில் நடிகர் கமலஹாசனின் உருவப்படத்தை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, ஜனவரி 06

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகக் கூறி கோவையில் நடிகர் கமலஹாசனின் உருவப்படத்தை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வார இதழ் ஒன்றில் தொடர் எழுதி வரும் நடிகர் கமல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவையில் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் ஆதரவு வழக்கறிஞர் பிரிவினர் கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கமலின் உருவப்படத்தைத் தீயிட்டு எரித்த வழக்கறிஞர்கள், கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

கமல் தன் நடிப்பு தொழிலை மட்டும் பார்க்க வேண்டும் எனவும், அரசியல் குறித்து அவதூறு பரப்பக் கூடாது எனவும் அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...