கால்நடை ஊழல் வழக்கு : லாலுவுக்கு 3.5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜனவரி 06

கால்நடை தீவன ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு 3.5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்க்கப்பட்டுள்ளது.

பீகாரில் 1994 - 1996 -ம் ஆண்டு வரை ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்த போது, கால்நடை தீவனம் வாங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக சி.பி.ஐ. வழக்குகளைப் பதிவு செய்தது. இது தொடர்பான வழக்குகள் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. அதில், ஒரு வழக்கில் லாலுவுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து 2013ல் தீர்ப்பளிக்கப்பட்டது. 

கால்நடை தீவனம் தொடர்பான மற்ற வழக்குகளையும் லாலு சந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பீகாரின், தியோகர் மாவட்ட கருவூலத்தில் 89.27 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், லாலு மற்றும் 15 பேரைக் குற்றவாளி என அறிவித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவ்பால் சிங் சமீபத்தில் தீர்ப்பளித்தார்.

தண்டனை விபரம் தொடர்பாக நேற்று முன்தினம் நடந்த விசாரணையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ள 16 பேரில், நான்கு பேர் தொடர்பான விசாரணை மட்டும் முடிந்ததால் நேற்றைக்குத் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், லாலு உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்து முடிந்தது. அதையடுத்து, இந்த வழக்கில், இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் கூறியிருந்தது.

அதன்படி, குற்றவாளிகளுக்கான தண்டனையை நீதிபதி வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிவித்தார். அதில், லாலு பிரசாத் யாதவுக்கு 3.5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பூல் சந்த், மகேஷ் பிரசாத், பேக் ஜூலியஸ், சுனில்குமார், சுசில்குமார், சுதிர்குமார் மற்றும் ராஜா ராமுக்கு 3.5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...