'நீண்ட நாட்கள் உயிர் வாழ மாடித் தோட்டம் அவசியம்' - வேளாண் பேராசிரியர்

நீண்ட நாட்கள் உயிர் வாழ மாடித் தோட்டம் அவசியம். மாடித் தோட்டத்தில் நாம் வளர்க்கக் கூடிய காய்கறிகள் தான் சுத்தமானவை. எந்த விதமான பூச்சிக்கொல்லி மருந்துகளும் அடிக்காமல் இயற்கையான முறையில் அதனை வளர்ப்பதினால் நாம் அதனை உன்னும் போது நீண்ட நாட்கள் வாழமுடியும்

கோவை, ஜனவரி 7

ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 'வேளாண் திருவிழா 2018' என்ற இரண்டு நாள் கருத்தரங்கு கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியது. 

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இன்று (ஜன. 7) மாடித் தோட்டம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோவை வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் முனைவர் சுரேஷ் பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது அவர் பேசுகையில், "நீண்ட நாட்கள் உயிர் வாழ மாடித் தோட்டம் அவசியம். மாடித் தோட்டத்தில் நாம் வளர்க்கக் கூடிய காய்கறிகள் தான் சுத்தமானவை. எந்த விதமான பூச்சிக்கொல்லி மருந்துகளும் அடிக்காமல் இயற்கையான முறையில் அதனை வளர்ப்பதினால் நாம் அதனை உன்னும் போது நீண்ட நாட்கள் வாழமுடியும்.



மாடித்தோட்டம் அமைக்க வீட்டில் நாம் வேண்டாம் என தூக்கி எறியப்படும் பொருட்களான தேங்காய் நாறு, தேங்காய் மட்டை, காய்ந்த இலைகள், காய்களின் கழிவுகள் போதுமானவை. இவற்றை சேகரித்து பிளாஸ்டிக் பைகளில் அடுக்கி வைத்து இயற்கை உரங்களை செலுத்தி விதைகள் அல்லது நாற்றுக்களை நடவுசெய்தால் மாடித்தோட்டம் தயார்.

இந்த மாதிரியான தோட்டத்தில் சிறிய இடத்தில் நாம் தக்காளி, கீரை வகைகள், மிளகாய், கறிவேப்பிலை, கத்திரிக்காய் போன்றவற்றை பயிரிடலாம். இதனால் நம் உடல் நலம் பாதிக்கப்படாமல் இருப்பதோடு, வரும் தலைமுறையினருக்கும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

அன்றாடம் வாங்கும் காய்கறிகளின் செலவுகளை நாம் குறைப்பதினால் நம் பொருளாதாரம் மேம்படும். இடமே இல்லாத இடத்தில் கூட காய்கறிகளை பயிர் செய்யும் அளவிற்கு தற்போது கருவிகள் வந்துள்ளன. அது கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் கிடைக்கும்."

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, இந்தக் கருத்தரங்கில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மாடித்தோட்டம் குறித்த சந்தேகங்களைக் கேட்டறிந்தனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...