இணையதள திருமண தகவல் மையம் மூலமாக பெண்களை ஏமாற்றிய நபரிடம் போலீசார் விசாரணை

இணையதள திருமண தகவல் மையம் மூலமாக பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை, ஜனவரி 7

இணையதள திருமண தகவல் மையம் மூலமாக பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பி.என். பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமுதவள்ளி. திருமணமாகி கணவனை இழந்த இவர் தனியார் இணையதள திருமண மையம் மூலமாக வரன் தேடி வந்தார். இந்த நிலையில், தனியார் திருமண தகவல் மையம் மூலமாக வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த புருசோத்தமன் (45) என்பவர் அறிமுகமானார். இவருக்கும் குமுதவள்ளிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், புருசோத்தமன் ஏற்கனவே இரண்டுமுறை திருமணமானவர் என்று குமுதவள்ளிக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் புருசோத்தமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பெண் காவலர் ஒருவர் கூறுகையில், "புருசோத்தமனுக்கு ஏற்கனவே திருமணமாகி கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகள் இருக்கிறார். ஆனால், தனக்கு திருமணமானதை மறைத்து குமுதவள்ளியை அவர் திருமணம் செய்துள்ளார். இதேப் போன்று 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதற்கு சம்மந்தப்பட்ட இணையதள திருமண தகவல் மையம் நடத்தி வரும் மோகன் மற்றும் வனஜா குமாரி என்பவர்களும் உடந்தை என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...