தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என ஆளுநர் கூறுவது வேடிக்கையாக உள்ளது- கி. வீரமணி

தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என ஆளுநர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது எனவும், இதனைத் தனது ஆய்வுகளில் ஆளுநர் உறுதிப்படுத்தினாரா எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை, ஜனவரி 8

தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என ஆளுநர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது எனவும், இதனைத் தனது ஆய்வுகளில் ஆளுநர் உறுதிப்படுத்தினாரா எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை லட்சுமிமில் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் திராவிடர் கழகத்தின் கோவை மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அவ்வமைப்பின் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் கூறுகையில், மத தீவிரவாதம், சாதி வெறி வளர்ந்து வரும் சூழலில் நாத்திகம் தான் மனிதநேயத்தை உருவாக்கும். தமிழ்நாட்டில் மட்டுமே நாத்திகர் இயக்கம் பெரியாரினால் மக்கள் இயக்கமாக உள்ளது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், மத்திய அரசு மண்டல கமிஷன் பரிந்துரைத்த 27 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றக்கோரியும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும்.

ஆன்மீக அரசியல் என்பது சொல்பவர்களுக்கும் புரியாது, கேட்பவர்களுக்கும் புரியாது. ஆன்மீகம் என்பது சாமியார் வேலை. ஆட்சி நடத்துவது அரசியல்வாதிகள் வேலை. இரண்டிற்கும் தொடர்பு இல்லை. அரசியல்வாதிகள் நல்ல நடிகர்களாக இருந்திருக்கிறார்கள். நடிகர் நல்ல அரசியல்வாதிகளாக இருப்பார்களா ?. 

போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது. தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்றார்.

மேலும், போக்குவரத்துத் துறையினை தனியார்மயமாக்கலாம் என்ற நீதிமன்ற கருத்து குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு, அரசின் கொள்கை முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமையில்லை. நீதிமன்றத்திற்கும் ஒரு எல்லை உண்டு என்றார்.

தொடர்ந்து, ஆளுநர் உரை என்பது அமைச்சரவையில் தயாரிக்கப்பட்டது. தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என ஆளுநர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. இதனைத் தனது ஆய்வுகளில் ஆளுநர் உறுதிப்படுத்தினாரா என கி.வீரமணி கேள்வி எழுப்பினார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...