மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் விபத்தில் பலியான 4 குடும்பத்திற்கு நிதியுதவி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து விபத்தில் பலியான 4 குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வழங்கினார்.

கோவை, ஜனவரி 8

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து விபத்தில் பலியான 4 குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வழங்கினார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.



மேலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் 2017-18 ஆம் ஆண்டிற்கான மாவட்டம் மற்றும் வட்டார அளவில் சுத்தம், சுகாதாரம் மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப்போட்டியிலும் 4 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு தொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டியானது பள்ளி அளவிலும் வட்டார அளவிலும் நடத்தப்பட்டு போட்டிக்கு மூன்று பேர் வீதம் என வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.1500 ரூ.1300 மற்றும் ரூ.1100 பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் நிவாராண நிதியிலிருந்து விபத்தில் மரணமடைந்த 2 குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையினையும், மேலும் 2 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை என மொத்தம் ரூ. 8 லட்சத்திற்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் சரண்யா ஹரி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பி.அய்யண்ணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) சி.கிருஸ்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...