கோவையில் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள்

ஊதிய உயர்வு, பிடித்தம் செய்த தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மண்டல போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை, ஜனவரி 9

ஊதிய உயர்வு, பிடித்தம் செய்த தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மண்டல போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, திமுக, தொமுச உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தமிழக அரசு தரப்பில் நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில் பணிக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



இந்நிலையில், தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கோட்ட அலுவலகங்கள் முன் ஜனவரி 9ம் தேதியன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

அதன்படி, இன்று மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு கோவை மாவட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருவதால் காவல்துறையினர் அதிகளவில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...