6-வது நாளாக நீடிக்கும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்: பொங்கல் சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு ரத்து, பயணிகள் ஏமாற்றம்

போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்தத்தால், இன்று தொடங்கவிருந்த பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டது.

ஜனவரி 9

போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்தத்தால், இன்று தொடங்கவிருந்த பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டது. இதனால், திட்டமிட்டபடி, பொங்கல் சிறப்பு பேருந்துகள் முழுமையான அளவில் இயக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஓய்வூதியர்களுக்கான நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4-ம் தேதி தொடங்கிய இந்த வேலைநிறுத்தமானது, 6-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அரசு தரப்பில் ஊதியத்தை அதிகமாகவே உயர்த்திவிட்டதாக அறிவித்துவிட்டது. இருப்பினும், தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிடும் மனநிலையில் இல்லை. அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள், தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் உள்ளுர் போக்குவரத்தை சமாளிக்கவே திணறுகின்றனர். மேலும், தற்காலிக ஓட்டுநர்களால் பல்வேறு இடங்களில் விபத்து ஏற்படுவதால், அரசுப் பேருந்தில் ஏறுவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், தைப்பொங்கல் வர உள்ளது. லட்சக்கணக்கானவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். நாளை மறுநாள் (11-ந் தேதி) முதல் ஊர்களுக்கு புறப்படுவார்கள். இதற்காக 11 ஆயிரத்து 983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இன்று தொடங்க இருந்த முன்பதிவு ரத்து செய்யப்பட்டு விட்டது. அதேவேளையில், முன்பதிவுக்கான எந்த ஏற்பாடுகளையும் போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்யவில்லை. மேலும், 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க ஓட்டுநர்களும், நடத்துநர்களும் நியமிக்க சாத்தியமில்லை. எனவே சிறப்பு பேருந்துகள் முழு அளவில் இயக்குவது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையான சிரமத்துக்கு உள்ளாவார்கள் எனத் தெரிகிறது. அரசுக்கும்-தொழிற்சங்கங்களுக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்படாமல் நீடித்து வருவதால் அதிகாரிகளும் குழப்பத்தில் உள்ளனர்.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஆயத்த பணிகளை செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மிகவும் குறுகிய காலமே இருப்பதால் முன்பதிவு செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாகும். இன்று மாலைக்குள் பிரச்சினை தீர்க்கப்பட்டால் மட்டுமே பொங்கல் சிறப்பு பேருந்துகளை முறையாக இயக்க முடியும். வேலைநிறுத்தம் முடிவுக்கு வராவிட்டால் அரசு மாற்று ஏற்பாடு செய்வதாக அறிவித்து இருந்தாலும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...