கடைசி மீனவர் கரை திரும்பும் வரை மீட்புப் பணி தொடரும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

கடைசி மீனவர் கரை திரும்பும் வரை மீட்புப் பணி தொடரும் என ஒகி புயல் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஜனவரி 9

கடைசி மீனவர் கரை திரும்பும் வரை மீட்புப் பணி தொடரும் என ஒகி புயல் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

ஒகி புயல் குறித்து தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏ பிரின்ஸ் உள்ளிட்டோரின் கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியதும், வருவாய் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மீனவர்களுக்குத் தகவல் தரப்பட்டது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநரால், தொலைப்பேசி வாயிலாக முக்கியத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 30ம் தேதி தமிழக அரசுக்கு ஒகி புயல் குறித்து தகவல் கிடைத்தவுடன், மாவட்ட நிர்வாகங்கள் மூலம் மாவட்ட மக்களுக்கும், மீனவர்களுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தென்கடலோர மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்தி விடுக்கப்பட்டது. தொலைத் தொடர்புக் கருவிகள் இல்லாததால் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்களுக்குத் தகவல் தர முடியவில்லை. அதேபோல, ஆழ்கடலில் தங்கி மீன் பிடிப்பவர்களுக்கும் தகவல் அளிக்க முடியவில்லை. 

ஒகி புயல் பாதித்த பிறகு, மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு, பிற மாநிலக் கரைகளில் கரை ஒதுங்கிய 1,174 மீனவர்களுக்கு உணவுப் படியாக ரூ.2,000 வழங்கப்பட்டு அவர்கள் பத்திரமாக தமிழகம் அழைத்து வரப்பட்டனர். காணாமல் போன மீனவர்களைத் தேடிய மீனவர்களுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் உணவுகளையும் தமிழக அரசு வழங்கியது. பிற மாநில கரைகளில் கரை சேர்ந்தவர்களை அழைத்து வர ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

அந்த வகையில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தமிழக மீனவர்களைப் பத்திரமாக அழைத்து வந்தனர். ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கப் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினேன். ஒகி புயல் நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு தரப்பில் ரூ.133 கோடி ரூபாய் முதற்கட்டமாக தமிழக அரசுக்கு வழங்கியது. கடைசி மீனவர் கரை திரும்பும் வரை மீட்புப் பணி தொடரும். ஒகி புயலில் சிக்கி மரணம் அடைந்த 20 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...