டியூசனுக்கு சென்ற பள்ளி மாணவனைக் கடத்த முயற்சி

திருப்பூரில் பள்ளி மாணவனை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்று பின்னர் அந்த மாணவன் தப்பி வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர், ஜனவரி 9

திருப்பூரில் பள்ளி மாணவனை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்று பின்னர் அந்த மாணவன் தப்பி வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் அருகே உள்ளது சீனிவாசா நகர். இங்கு குடியிருந்து வருபவர்கள் செந்தில்- அனுராதா தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கரிகாலன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருப்பூருக்கு குடும்பத்துடன் குடியேறி லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இதனால், அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அனுராதா இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் கரிகாலன் வழக்கம் போல் அருகில் டியூசனுக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது சைக்கிள் பஞ்சராகி விடவே தள்ளிக்கொண்டு நடந்து சென்றுள்ளார். அவ்வழியாக முகத்தை மூடியபடி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென கரிகாலனை வாயை பொத்தி இருசக்கரவாகனத்தில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது ஒருகட்டத்தில் தனக்கு பின்னாள் அமர்ந்திருந்த கடத்தல்காரனின் கையை சிறுவன் கடித்துள்ளான். இதனை அடுத்து அங்குள்ள பேக்கரி முன்பாக சிறுவனை இறக்கிவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அருகில் இருந்தவர்களிடம் தான் கடத்தப்பட்டு தப்பி வந்த சம்பவம் குறித்து கரிகாலன் தெரிவித்ததைத் தொடர்ந்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், இதுகுறித்து 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். மேலும், பள்ளி மாணவன் கடத்தப்பட்டதாக கூறப்படும் வீட்டருகே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதும், அவர்கள் வெளியூர் சென்றுள்ளதாள் திரும்பி வந்த பிறகு வீடியோ பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...