”பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு”

நாடு முழுவதும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதிகமாக உள்ளதாக மாதர் சங்க அகில இந்தியப் பொதுச்செயலாளர் மரியம்தாவ்லே குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை, ஜனவரி 10

நாடு முழுவதும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதிகமாக உள்ளதாக மாதர் சங்க அகில இந்தியப் பொதுச்செயலாளர் மரியம்தாவ்லே குற்றம்சாட்டியுள்ளார். 



அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு கூட்டம் கோவையில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சங்கத்தின் அகில இந்திய தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச்செயலாளர் மரியம்தாவ்லே மற்றும் சுபாஷினிஅலி, உ. வாசுகி, சுதாசுந்தராமன், சுகந்தி, பாலபாரதி உள்ளிட்டு நாடு முழுவதும் இருந்து மத்தியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை சரோஜ்பவனில் இன்று நடைபெற்றது.

இதில், பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய மரியம்தாவ்லே கூறுகையில், பா.ஜ.க. அரசு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் நடவடிக்கையின் காரணமாக பெரும்பாலானோர் வறுமையில் வாடி வருகின்றனர்.  மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற திட்டங்களால் அனைத்து தரப்பினரும் பாதித்தனர் என்றாலும்கூட நேரிடையாக பெண்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் உள்ளிட்ட சங்பரிவார கும்பல்களால் சிறுபான்மையினர், தலித் மக்கள், பழங்குடியினர், பெண்கள் ஆகியோர் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்த வன்முறைகள் அதிகரித்துள்ளது. 

முத்தலாக் முறையை தடைசெய்ய வேண்டுமென்பதில் மாதர் சங்கத்திற்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடுப்பு சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு எந்த வகையிலும் உதவாது. பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எவ்வித நிவாரணத்தையும் பெற்றுத்தராது. இச்சட்டம் இயற்ற அனைத்து தரப்பினரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். திரிபுரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், இடதுமுன்னணியின் வெற்றிக்காக மாதர் சங்கம் பிரச்சாரத்தில் ஈடுபடும். என்றார். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...