கோவையில் மூதாட்டியைக் கொலை செய்து​ 17 பவுன் நகை கொள்ளை

கோவை, செல்வபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியைக் கொலை செய்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த 17 பவுன் நகையையும் கொள்ளையடித்துச் சென்றனர்



கோவை, ஜனவரி 11

கோவை, செல்வபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியைக் கொலை செய்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த 17 பவுன் நகையையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

செல்வபுரம் தேவேந்திர வீதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி ராமாயி அம்மாள் (75). இந்தத் தம்பதிக்கு 2 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே, சின்னசாமி இறந்து விட்டதால் ராமாயி அம்மாள் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டைத் திறந்து பார்த்தபோது ராமாயி அம்மாள் உயிரிழந்திரப்பது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில், செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அவரது காது, மூக்கு ஆகிய இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், வீட்டின் பீரோவில் இருந்த 17 பவுன் நகையையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...