விசாரணை ஆணையம் முன்பு மீண்டும் ஆஜரானார் ஷீலா பாலகிருஷ்ணன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜரானார்.

ஜனவரி 11

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜரானார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

இதில், சசிகலா உறவினர் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் தீபக், அரசு மருத்துவர்கள், தி.மு.க. பிரமுகர் டாக்டர் சரவணன், தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவ், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் உள்பட பலர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

முன்னாள் தலைமை செயலாளராகவும், அரசு ஆலோசகராகவும் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஏற்கனவே, கடந்த 20-ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்து இருந்தார். இந்த நிலையில் ஷீலா பாலகிருஷ்ணனை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்று காலை ஷீலா பாலகிருஷ்ணன் சேப்பாக்கத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

அப்போது, ஷீலா பாலகிருஷ்ணனிடம் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மேலும் சில தகவல்களை நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்பட்டது. 

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது, ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்த 4 பேரில் ஷீலா பாலகிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...