வால்பாறையில் சிறுத்தைப்புலி தாக்கி காளை மாடு பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற காளை மாட்டை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஜனவரி 11

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற காளை மாட்டை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



வால்பாறை காமராஜ்நகர் பகுதியில் வசித்து வருபவர் அன்பழகன். இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் மேய்ச்சலுக்குச் சென்ற காளை மாடு, மாலை நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அன்பழகன் பல இடங்களில் தனது காளை மாட்டைத் தேடியுள்ளார். அப்போது, சவரங்காடு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தனது 2 வயதுள்ள காளை மாடு சிறுத்தைப்புலி தாக்கி இறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், வால்பாறை வனச்சரகர் சக்திவேல் சம்பவ இடத்திற்கு வந்தார். தொடர்ந்து காளை மாடு இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டார். 

சமீபகாலமாக, வால்பாறைநகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து அதனைப் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...